சென்னை ராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்திற்கு பாலசுப்ரமணியம், ஆலந்தூர் மண்டலத்திற்கு நிர்மல் ராஜ், பெருங்குடி மண்டலத்தில் அனீஸ் சேகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15வது மண்டலமான சோழிங்கநல்லூருக்கு விஷ்ணு ஐஏஎஸ், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கொரோனா தடுப்பு பணியில் இருந்த […]
