Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 18…!!

மார்ச் 18  கிரிகோரியன் ஆண்டின் 77 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 288 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி மோலே மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார். 1438 – […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 17…!!

மார்ச் 17  கிரிகோரியன் ஆண்டின் 76 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 289 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். 180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.[1] 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர். 1805 – நெப்போலியன் தலைவனாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 15…!!

மார்ச் 15  கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 351 – இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான். 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான். 1493 – கொலம்பசு அமெரிக்காக்களுக்கான தனது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 14…!!

மார்ச் 14  கிரிகோரியன் ஆண்டின்73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 313 – யின் பேரரசர் உவைடி சியோங்னுஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார். 1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார். 1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன. 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின்வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 13…!!

மார்ச் 13  கிரிகோரியன் ஆண்டின் 72 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 73 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 293 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்தொகு 624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குறைசிகளுக்கும் இடையில் ஹெஜாஸ் பகுதியில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1138 – கர்தினால் கிரெகோரியோ கோண்டி எதிர்-திருத்தந்தையாக ஆறாம் விக்டர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார். 1567 – எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது. 1639 – ஆர்வர்டு கல்லூரிக்கு சமயவாதி யோன் ஆர்வர்டு என்பவரின் பெயர் இடப்பட்டது. 1640 – இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1] 1697 – கடைசி மாயா பேரரசின் தலைநகரம் நோச்பெட்டென் எசுபானிய தேடல் வெற்றி வீரர்களிடம் வீழ்ந்தது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 12…!!

மார்ச் 12  கிரிகோரியன் ஆண்டின் 71 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 72 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1870 – இலங்கையில் இருந்து முதல் தடவையாக ஐரோப்பாவிற்கு கோப்பி ஏற்றுமதி சூயசு கால்வாய் வழியே மேற்கொள்ளப்பட்டது.[1] 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 11…!!

மார்ச் 11  கிரிகோரியன் ஆண்டின் 70 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1] 1861 – அமெரிக்க உள்நாட்டுப் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 10…!!

மார்ச் 10  கிரிகோரியன் ஆண்டின் 69 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 296 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை. 1735 – உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. 1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது. 1814 – பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 9…!!

மார்ச் 9  கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார். 1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. 1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார். 1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர். 1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். 1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். 1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 8…!!

மார்ச் 8  கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  1010 – பிர்தௌசி தனது சாஃனாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார். 1576 – எசுப்பானிய நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய மாயன் நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார். 1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார். 1658 – வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை சுவீடனிடம் இழந்தார். 1702 – ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 7…!!

மார்ச் 7  கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 161 – உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். அவரது வளர்ப்பு மகன்கள் மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 321 – உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார். 1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது. 1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 6…!!

மார்ச் 6  கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 632 – முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். 845 – இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர். 1079 – ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். 1204 – சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார். 1447 – ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார். 1479 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது. 1521 – பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார். 1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 5…!!

மார்ச் 5  கிரிகோரியன் ஆண்டின் 64 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 65 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 363 – உரோமைப் பேரரசர் யூலியன் அந்தியோக்கியாவில் இருந்து 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான். 1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார். 1616 – 73 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் பரலோகக் கோளங்களின் சுழற்சி என்ற நூல் தடைசெய்யப்பட்ட ஆவணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் அறிவிக்கப்பட்டது. 1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 4…!!

மார்ச் 4  கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 1152 – பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். 1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர். 1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். 1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1493 – கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார். 1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 3…!!

மார்ச் 3  கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  473 – கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 724 – யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார். 1284 – வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது. 1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார். 1585 – அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது. 1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார். 1845 – புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. 1857 – இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன. 1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 2…!!

மார்ச் 2  கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். 1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார். 1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார். 1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1797 – இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது. 1807 – அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது. 1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 1…!!

மார்ச் 1  கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. 1565 – இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது. 1628 – இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார். 1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. 1790 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 1796 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பத்தாவியக் குடியரசினால் தேசியமயமாக்கப்பட்டது. 1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28…!!

பெப்ரவரி 28  கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் கிமு 202 – லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோ அவரது மகன் இரண்டாம் கவாத்தின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார். 1525 – அசுட்டெக் மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெசின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார். 1700 – சுவீடனில் இன்று மார்ச் 1. சுவீடிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. 1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27…!!

பெப்ரவரி 27  கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார். 425 – கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது. 907 – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். 1560 – இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார். 1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது. 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 26…!!

பெப்ரவரி 26  கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். 1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 25…!!

பெப்ரவரி 25  கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார். 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவியில் இருந்து அகற்றினான். 1797 – வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர். 1831 – உருசியப் பேரரசுக்கு எதிரான போலந்து மக்களின் நவம்பர் எழுச்சியின் ஒரு பகுதியாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 24…!!

பெப்ரவரி 24  கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான். 1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது. 1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார். 1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது. 1822 – உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது. 1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 23…!!

பெப்ரவரி 23  கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது. 1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. 1836 – டெக்சாசுப் புரட்சி: அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவில் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது. 1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன. 1854 – ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது. […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 22…!!

பெப்ரவரி 22  கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது.1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். 1651 – செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர். 1658 – இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.[1][2] 1797 – பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது. 1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது. 1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 21…!!

பெப்ரவரி 21  கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். 1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார். 1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது. 1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன. 1613 – முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது. 1803 – கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.[1] 1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது. 1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 20…!!

பெப்ரவரி 20  கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார். 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.[1] 1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1810 – பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார். 1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.[2] 1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது. 1846 – தேசிய விடுதலைக்கான போராட்டமாக போலந்துக் கிளர்ச்சிவாதிகள் கிராக்கோவ் நகரில் போராட்டங்களை முன்னெடுத்தனர். 1865 – உருகுவைப் போர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 19…!!

பெப்ரவரி 19  கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார். 1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார். 1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது. 1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. 1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 18…!!

பெப்ரவரி 17  கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். 1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது. 1788 – லெப்டினண்ட் போல் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 17…!!

பெப்ரவரி 17  கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். 1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது. 1788 – லெப்டினண்ட் போல் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 15…!!

பெப்ரவரி 16  கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். 1630 – என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. 1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 15…!!

பெப்ரவரி 15  கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான். 706 – பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார். 1214 – ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். 1493 – கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.[1] […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 14…!!

பெப்ரவரி 14  கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். 1014 – திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார். 1076 – திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார். 1130 – இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1349 – பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 1400 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது. 1556 – […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 13…!!

பெப்ரவரி 13  கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது. 1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1575 – பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார். 1633 – திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார். 1689 – வில்லியம், மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 1692 – கிளென்கோ படுகொலைகள்: இசுக்காட்லாந்தில் கிளென் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 12…!!

பெப்ரவரி 12  கிரிகோரியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1] 1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். 1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன. 1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 11…!!

பெப்ரவரி 11  கிரிகோரியன் ஆண்டின் 42 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 660 – யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள். 55 – உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. 244 – சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். 1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். 1626 – எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 10…!!

பெப்ரவரி 10  கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது. 1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர். 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார். 1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது. 1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 9…!!

பெப்ரவரி 9  கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார்.[1] 1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.[2] 1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[4] 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது.[5] 1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது. 1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 8…!!

பெப்ரவரி 8  கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 421 – மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார். 1238 – மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர். 1347 – பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது. 1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார். 1601 – முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது. 1785 – வாரன் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 7…!!

பெப்ரவரி 7  கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார்.[1] 1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.[2] 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின. 1812 – அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. 1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார். 1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 6…!!

பெப்ரவரி 6  கிரிகோரியன் ஆண்டின் 37 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 60 – கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது. 1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன. 1685 – இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1788 – மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது. 1792 – மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.[1] 1806 – கரிபியனில் நடந்த சான் டொமிங்கோ சமரில் பிரித்தானியக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 5…!!

பெப்ரவரி 5  கிரிகோரியன் ஆண்டின் 36 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 62 – இத்தாலியின் பொம்பெயி நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது. 756 – ஆன் லூசான் தாங் சீன அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தன்னைப் பேரரசனாக அறிவித்தான். 789 – முதலாம் இதிரிசு மொரோக்கோவை அப்பாசியக் கலீபகத்தில் இருந்து பிரித்து, முதலாவது மொரோக்கோ நாட்டை உருவாக்கினார். 1597 – சப்பானின் ஆரம்பகால கிறித்தவர்கள் பலர் அந்நாட்டின் புதிய அரசால் சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். 1649 – முதலாம் சார்லசின் மகன் சார்லசு இசுடுவர்டை இசுக்காட்லாந்து நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசு என்ற பெயரில் அந்நாட்டின் மன்னனாக நாட்டில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 4…!!

பெப்ரவரி 4  கிரிகோரியன் ஆண்டின் 35 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  211 – உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இறந்தார். தமக்கிடையே சண்டை பிடிக்கும் அவரது இரண்டு மகன்களின் கட்டுப்பாட்டில் பேரரசு வந்தது. 960 – சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. 1169 – சிசிலியை நிலநடுக்கம் தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தோ அல்லது இறந்தோ போயினர். 1488 – பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தை ஆரம்பித்தார். 1555 – ஜான் ரொஜர்சு தீயிட்டுக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 3…!!

பெப்ரவரி 3  கிரிகோரியன் ஆண்டின் 34 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 (நெட்டாண்டுகளில் 332) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1377 – இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1451 – சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார். 1488 – போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார். 1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது. 1661 – மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது. 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1706 – புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து-உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை சுற்றி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 2…!!

பெப்ரவரி 2  கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். 962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். 1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார். 1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.[1] 1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது. 1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். 1868 – சப்பானிய பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 1…!!

பெப்ரவரி 1  கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர். 1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான். 1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான். 1788 – ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 30…!!

சனவரி 30  கிரிகோரியன் ஆண்டின் 30 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  கிமு 516 – எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 1018 – போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின. 1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1] 1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள். 1649 – பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது. 1649 – இளவரசர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 29…!!

சனவரி 29  கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செர்ஜியசு புனிதப்படுத்தப்பட்டார்.[1] 946 – புதிதுப் பேரரசின் மன்னரினால் கலிபா அல்-முசுதாக்பி குருடாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார்.[2] 1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து பின்வாங்கினர். 1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் உருசியாவை வென்றது. 1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார். 1834 – […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 28…!!

சனவரி 28  கிரிகோரியன் ஆண்டின் 28 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 (நெட்டாண்டுகளில் 338) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார். 1077 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது. 1393 – பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் உயிர் தப்பினார். 1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 27…!!

சனவரி 27  கிரிகோரியன் ஆண்டின் 27 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 98 – திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது. 1302 – கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார். 1343 – திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார். 1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார். 1695 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 26…!!

சனவரி 26 கிரிகோரியன் ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 661 – கடைசி கலீபா அலீயின் படுகொலையுடன் ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1500 – எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார். 1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 1564 – ஊலா நகரப் போரில் லித்துவேனியா உருசியாவை வென்றது. 1564 – இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றிற்கிடையேயான அதிகாரபூர்வமான வேறுபாட்டை வரையறுத்தது. 1565 – விஜயநகரப் பேரரசுக்கும் இசுலாமிய தக்காண சுல்தான்களுக்கும் இடையே இடம்பெற்ற தலைக்கோட்டை சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி […]

Categories

Tech |