சிறந்த சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது கூடலூரை சேர்ந்த முகமது ஆஷிக் என்பவருக்கு முதல்வர் வழங்கினார். இந்தியா முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த சமூக சேவை செய்ததற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் ஜீவசக்தி […]
