சென்னிமலை அருகே இருக்கும் பல ஊர்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையின் கிரிவலம் சுற்றி வந்தார்கள். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னிமலை அருகே இருக்கும் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. இதனால் நாட்டார் ஈஸ்வரர் கோவிலுக்குச் சென்று காவிரி நீர் […]
