சிட்டுக்குருவிக்காக மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், ஒரு கிராமம் இருளில் வாழ்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே இருக்கிறது பொத்தகுடி என்ற கிராமம்.. இந்த கிராமத்தின் மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டை போட்டு அடைகாத்து வந்தது. இதனை கண்ட கிராமத்து இளைஞர்கள், அதனை பாதுகாக்க தொடங்கினர். தெருவிளக்குகள் எரிவதற்கு மொத்த கண்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டியிருக்கும் மின் இணைப்பு பெட்டியிலிருப்பதால், ஊர்மக்களால் சுவிட்சை ஆன் பண்ண முடியவில்லை. […]
