மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோட்டகபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது ஷோபாராணி. இவருக்கு திருமணம் ஆகி விஷால்(7) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் விஷாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் விஷாலை, ஷோபாராணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று உள்ளார். ஆனாலும் விஷாலுக்கு சரியாகவில்லை. இதன்காரணமாக ஷோபாராணி மன உளைச்சலோடு காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் […]
