நியாயவிலை கடைகளில் அரிசி மூட்டைகளை கடத்த முயற்சி செய்த கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிவசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் இம்மாவட்டம் முழுவதுமாக நியாய விலை கடையின் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை காவல் துறையினர்களை நியமித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அவர்கள் நியாய விலைக் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் 8 மணி அளவில் வாணியம்பாடி காதர்பேட்டை அடுத்து […]
