மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிக்கதிம்மனஅள்ளி கிராமத்தில் மூதாட்டி தொட்டியம்மாள் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடிசையில் இருந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் மழை பெய்து நின்றபின் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது வீட்டின் அருகில் கிடந்த மின்வயரை மூதாட்டி மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]
