போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தது தொடர்பாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அடுத்துள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் பார்த்திபன்(40). இவருக்கு பெரியநாயகி(33) என்ற மனைவியும், ஹேமாஸ்ரீ(7), பிரகஸ்ரீ(4) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். பார்த்திபன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் திண்டிவனம் பாஞ்சாலம் ரோட்டில் உள்ள குடிபோதை மற்றும் மன நோய் சிகிச்சை மையத்தில் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற கடந்த மாதம் […]
