சாலை வசதி அமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கணாம்புதூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் அரசுப் பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கிராமத்திற்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் மழைபெய்தால் சகதியாகவும் மாறிவிடுகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. […]
