இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் +1 படிக்கும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கல்பாரப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிந்தன் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். சில நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கியிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிந்தன் மற்றும் அவரின் மனைவி […]
