கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முல்லைநகரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 18 – ஆம் தேதியன்று மத்திய பேருந்து நிலையத்தில் பாலசுப்பிரமணியம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்தகுமார் மற்றும் முத்தமிழ்குமரன் ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலசுப்பிரமணியன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
