சாலை வசதி அமைத்து தருமாறு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொண்டாந்தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் 100 ‘ க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆர்சுத்திப்பட்டு பகுதியிலிருக்கும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காகவும், தேவைப்பட்ட பொருள்களை வாங்க வேண்டுமென்றாலும் ஆர்சுத்திப்பட்டு பகுதிக்குத்தான் செல்ல […]
