அரசின் சலுகைகளுக்கு வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாக பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை துறையின் சார்பில் ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்குவதற்காக ஆடுகள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வனப்பகுதிக்குள் அனுமதியின்றி ஆட்டுக்குட்டிகளை கொண்டு வரக்கூடாது என அந்த […]
