12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், தலைவர் தர்மலிங்கம், செயலாளர் பாலமுருகன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சென்னியப்பன், மாவட்ட செயலாளர் சி.நல்லசாமி போன்றோர் கலந்து கொண்டு பேசினர். இதனையடுத்து போராட்டத்தில் 41 மாத […]
