தர்மபுரி மாவட்டத்தில் வீரமணி என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். வீரமணிக்கும் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வீரமணியை உடன் பிறந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வீரமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வீரமணி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]
