கடந்த வருடம் சென்னையில் கனமழை பெய்தபோது சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் சாலைகள் உயர்த்தி போடப்பட்டதன் காரணமாக மக்களுடைய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இறையன்பு ஐஏஎஸ் தமிழகத்தில் சாலை போடும்போது மேல்தள கட்டுமானத்தை முழுவதுமாக சுரண்டி எடுத்து விட்டு அதே அளவிற்கு மேல் தளம் போட வேண்டும் என தெரிவித்துள்ளார். […]
