சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபொழுது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சி, மொட்டையம்மாள், முத்தம்மாள், ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41 லிட்டர் சாராயப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தார்கள். […]
