சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சினால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதிகளில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி அதை மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதும் மற்றும் சாராய ஊறல்களை அழிப்பதும் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கல்வராயன்மலை சுற்றி அமைந்திருக்கும் கிராமப்புறங்களில் […]
