சாமி சிலையை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் முன்பாக வெங்கல்லிலான மகாமுனி சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரைவீரன் கோவில் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மதுபானம் அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களை எச்சரித்தும் நிறுத்தவில்லை. கடந்த 6-ஆம் தேதி […]
