பழனி அருகில் சாமி சிலைகளை தெருவில் வீசியது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கணக்கன் பட்டியில் ஒரு அரச மரம் அமைந்துள்ளது. அந்த மரத்தின் அடியில் சுமார் ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலை அருகில் ராகு, கேது, மூஞ்சுலு போன்ற சிறிய சிலைகளும் இருந்தன. இந்நிலையில் ராகு, கேது சிலைகள் அந்தப் பகுதியில் உள்ள தெருவில் கிடந்துள்ளது. […]
