கடந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மோர்வின் நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்த பாலம் திகழ்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அந்த பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம் பூனரமைப்பு பணிகள் முடிந்து ஐந்து நாட்களுக்கு முன்பு குஜராத்தி புத்தாண்டு அன்று மீண்டும் திறக்கப்பட்டது. […]
