Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லத்தியை எங்கே ? சுவர் எகிறி குதித்து ஓடிய காவலர்…. மாஜிஸ்ட்ரேட் அறிக்கையில் தகவல் …!!

சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் நீதித்துறை நடுவர் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, மரணம் நிகழ்ந்தது தொடர்பாக நீதித்துறை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையாக இருக்கக்கூடிய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணை எடுத்ததற்கு பிறகு இதில் நடந்திருக்கக் கூடிய விஷயங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நியமிக்கப்பட்டிருந்தார். அறிக்கை தாக்கல்: நீதித்துறை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் மரணம் – டி.ஐ.ஜியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை  நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள்,  நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சாத்தான்குளத்தில் நீதிபதி மீண்டும் விசாரணை …!!

சாத்தான்குளத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாத்தான்குளம் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தார். நேற்று இறந்த தந்தை – மகன் குடும்பத்தினரிடம் திருச்செந்தூர் அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உத்தரவு!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களும் சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பிரேதப்பரிசோதனை அறிக்கை, வழக்கு ஆவணங்களை உடனே சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் டிஐஜி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர். ஆவணங்கள், பிரேதப்பரிசோதனை அறிக்கையை பெற்று இன்று மாலையே விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிர்ச்சி – விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலம் … பெண் அதிகாரி வாக்குமூலம் …!!

சாத்தான்குளம் மரண வழக்கில் காவல்துறை நிகழ்த்திய கொடூரம் தற்போது அம்பலமாகியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது,  நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிர்ச்சி விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ்சுக்கு நடந்த துயரம் குறித்து சாட்சியங்கள் சொல்லிய வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத்தை அங்குள்ள […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர்கள் மீது ”கொலை வழக்கு” முகாந்திரம் இருக்கு – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது நீதிபதிகள் அதன் விரிவான உத்தரவை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக விசாரணையை கையில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய விடிய தாக்கி உள்ளனர்… மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல்!!

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் சிறையில் விடிய விடிய தாக்கியதாக மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நேரடி சாட்சிகள் விசாரணை மூலம் தந்தையையும், மகனையும் அதிகாரிகள் தாக்கியது அம்பலமானது. அந்த அறிக்கையில் காவல்நிலைய மேஜை, லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் ஒருவர் கூறியுள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பு … அடுத்தடுத்து நிகழும் பரபரப்பு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவர் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உடம்பில் அதிக அளவு காயம் இருப்பதாகவும், இதனால் போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு : ”சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு” ஐகோர்ட் கிளை அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மூன்று விஷயத்தை முக்கியமாக தெரிவித்திருந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ்  உடலில் அதிக காயம் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை சரக டிஐஜி அல்லது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தூத்துக்குடி எஸ்.பி மாற்றம் – சாத்தான்குளம் சம்பவத்தால் அதிரடி நடவடிக்கை …!!

தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்பி ஆக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்பி ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கைதாகி நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் சாத்தான்குளம் போலீஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 மணிக்குள்ள சொல்லுங்க…. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்…. அரசுக்கு கெடு விதித்தது ….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என ஐ.கோர்ட் கிளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயிரிழந்த இருவரின் உடல் நிலை பிரதே பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இருவரது உடலிலும் காயங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் போலீசார் மீது […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம்…. எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? பரபரப்பு உத்தரவு …!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்விகளை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதற்காக அதிகாரிகள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார்,  துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல நீதித்துறை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு நொடி கூட வீணாக கூடாது…. போலீஸ் மீது கேஸ் போடலாம்… ஐகோர்ட் அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MKS சொல்கிறார்…. EPS செய்கிறார்… ஹீரோவான DMK, AIDMK.. கெத்து சார் நீங்க …!!

தமிழக அரசியலை பொறுத்தவரை திமுக தலைவர் முக.ஸ்டாலின் சொல்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்கின்றார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக மாறி இருந்தது சாத்தான்குளம் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரண சம்பவம். இது பலருக்கும் ஆத்திரத்தை மூட்டியது, தமிழக காவல்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் மாறிப்போனது. தேசிய அளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஜெயராஜும், பென்னிக்ஸ்சும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொல்லி ஒரு நாள் ஆச்சு… ”செய்து காட்டிய எடப்பாடி” மாஸாக உயரும் இமேஜ்

சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கினை தமிழக அரசு CBI விசரணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. கடந்த 19 ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகனான இருவரும் ஊரடங்கை உத்தரவை மீறி நேரத்தை தாண்டி கடை நடத்தி வந்ததாக கூறி இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த வழக்கில் கோவில்பட்டி கிளை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு… தமிழக அரசு அரசாணை வெளியிட்டது …!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19 ஆம் தேதியன்று தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட போது மரணமடைந்ததை தொடர்ந்து வழக்கு தற்போது நடைபெற்று வந்தது. அந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு உள்துறை அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தாலும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்…. ஸ்கோர் செய்த எடப்பாடி… ஹீரோவாக மாறினார் …!!

சாத்தான்குளம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக மாறி இருந்தது சாத்தான்குளம் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரண சம்பவம். இது பலருக்கும் ஆத்திரத்தை மூட்டியது, தமிழக காவல்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் மாறிப்போனது. தேசிய அளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

#BREAKING: தந்தை மகன் மரணம் : ”வழக்கு சிபிஐக்கு மாற்றம்” அரசாணை வெளியீடு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்த மரணத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ வசம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? முதல்வர் பதவி எதற்கு? ஸ்டாலின் கண்டனம் …!!

சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதில் நீதிபதி விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், .கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்… வெளியான CCTV பதிவு… FIRல் முரண்பாடு …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவலறிக்கையில் முரண்பாடு இருப்பது வெளியாகியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை கொடூரமாக தாக்கியதால் தான் இவர்கள் இருவரும் மரணம் நிகழ்ந்துள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே… கமல்ஹாசன்!!

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. சாத்தான்குளம் வழக்கையும் சிபிஐ-க்கு மாற்றினால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை மகன் உயிரிழப்பு : நீதிபதிகள் விசாரணை !

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் தன்மை குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று அதிகாலை நான்கு மணிவரை சாத்தான்குளம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்!

சாத்தான்குளத்தில் காவலர்கள் சித்தரவதையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வணிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நியமித்து எஸ்.பி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Categories
அரசியல்

சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது… கே.எஸ்.அழகிரி..!!

சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறைத்தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் போராட்டம் நடத்துவதற்கு வழிவகுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் ட்வீட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர உத்தரவு!

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எச்சரித்த முக.ஸ்டாலின்…. சரண்டர் ஆன எடப்பாடி… நல்லது நடந்தால் சரி தான் …!!

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தேசிய அரசியலிலும் எதிரொலித்த இந்த பிரச்சனை ஆளும் அரசுக்கு எதிராக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு மீது ஏற்பட்ட களங்கம்…. ”முக்கிய முடிவு எடுத்த எடப்பாடி”…. மக்கள் வரவேற்பு …!!

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு – சிபிஐக்கு மாற்ற முடிவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

சேலம் தலைவாசலில் தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி பேசும் போது, சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் மீது வழக்கு போட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை கிளைக்கு விசாரணைக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் மரணம் : நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது – பாஜக அறிக்கை

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர்  வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்.  இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள் ஜாதி, மத, பாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டன குரல் எழுப்புகிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பது, பிரேத பரிசோதனைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினி இரங்கல் …!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்த  பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருவரின் மரணத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் இந்தியளவில் பூதகரமாகியுள்ளது. இந்த மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது… உங்களில் ஒருவனாக நானும்…. நடிகர் சூர்யா அறிக்கை ..!!

சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பலரும் நியாயம் கேட்டு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

3 வழக்கு 3 நீதி…..! காவல்துறை ஹீரோவா ? வில்லனா ?

சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையை வில்லனாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டப்படுவதாக ஆதங்கம் எழுந்துள்ளது. அதேநேரம் காவல்துறையினருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறை ஹீரோவா ? வில்லனா என்பது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். காவல்துறை மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல மாதங்களுக்கு முன்பு வெளியான வீடியோ இப்போது மீண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பக்கூடாது – சிங்கம் பட ஸ்டைலில் அதிரடி அறிக்கை …!!

சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – நடிகர் சூர்யா கண்டனம் …!!

சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவத்தை கண்டித்து நடிகர் சூர்யா கண்டன  வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தில்  செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி வருகிறது. இந்த மரண சம்பவத்தை கண்டித்து சினிமா, விளையாட்டு என பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கோவில்பட்டியில் நிகழ்ந்த லாக்கப் […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… முதல் ஆளாக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்..!!

சாத்தான்குளத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனிடையே கடந்த 20ஆம் தேதி இரவு ஊரடங்கின்போது செல்போன் கடையைத் திறந்ததற்காக கூறி போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை நடத்துவதற்காக  அழைத்துச் சென்றனர். […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: உடல்களை பெற்றனர் உறவினர்கள் …!!

மரணமடைந்த தந்தை – மகன் உடல்களை உறவினர்களை பெற்றுக் கொண்டனர். சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ்,  அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள், வணிகர் சங்கங்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். மேலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில்  உயிரிழந்த ஜெயராஜ் மகள் சொல்லும் போது, இந்த வழக்கை  உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. வழக்கில் கொலை வழக்கு பதிவு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: தந்தை, மகன் மரணம் – பிரேத பரிசோதனை நிறைவு …!!

கோவில்பட்டி கிளை சிறையில் மரணம் அடைந்த தந்தை மகன் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு அடைந்து. சாத்தான் குளத்த்தில் செல்போன் கடை நடத்தி வந்த வியாபாரிகளான ஜெயராஜ், பெண்ணிக்ஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்து நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிர் இழப்புக்கு காரணம் போலீஸ் தான் காரணம் என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் விதியை மீறி கடைகளை திறந்து வைத்ததாக கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதி தலைமையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம்: மாஜிஸ்திரேட்டு நீதி விசாரணை …!!

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு நீதி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்த்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இருவரின் உயிரிழப்புக்கு காரணம் காவலர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இருவரின் உடல் பாளையங்கோட்டை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு… இரு எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்..!!

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு… உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடமாற்றம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி […]

Categories

Tech |