Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிசிடிவி பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை ….!!

தந்தை – மகன் சித்திரவதை தொடர்பாக காவல் சாத்தான்குளத்தில் சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வைக்கிறார். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்து இருக்கின்றது.அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் இந்த வழக்கில் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் CCTV பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸ்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட நாளின்போது சிசிடிவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது முடிவல்ல… ஆரம்பம்..! உங்கள பாத்துட்டு இருப்போம்… ஒருத்தரையும் விடாதீங்க …!!

சாத்தான்குளம் கைதுகள், கடமை இப்போது தான் தொடங்குகின்றது என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்கிக்கொண்ட தமிழக அரசு: சாத்தான்குளம் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கபட்டு படுகொலை செய்தவர்கள் நீதிமன்றத்தின் தலையிட்டால் சட்டத்தின் முன்பு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கை, நீதிமன்றம்,  ஊடகம் என அனைத்து தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆமாம்…! அடிச்சாங்க… அப்ரூவராக மாறிய SI…. பரபரப்பாக நகரும் வழக்கு …!!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் இருவரும் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு காவலர்கள் அப்ரூவலாக மாறி இருக்கின்றார்கள்.  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம் அடுத்தடுத்து வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லா அதிகாரமும் தாறோம்…. தூத்துக்குடி நீதிமன்றம் போங்க… ஐகோர்ட் அதிரடி !!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை  அனுமதி அளித்துள்ளது. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி நடைபெற்றது. இதனையடுத்து  விரிவான உத்தரவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்ட்டு இருக்கின்றது. இதில் முன்னதாக சாட்சி வழங்கிய பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று  நீதிபதிகள் கூறி இருந்தார்கள். அதேபோல சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுள்ளது என்ற பாராட்டையும் நீதிகள் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து  சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீதியை நிலைநாட்டியுள்ளது சிபிசிஐடி – நீதிபதிகள் பாராட்டு 

தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த காவல்துறையினரின் விறுவிறு சேஸிங்…!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பாக சிபிசிஐடி மிகவும் துரிதமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் என 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு திருநெல்வேலி நோக்கி பயணித்த ஸ்ரீதர் கயத்தாறு சோதனைச்சாவடியில் வாகனத்தை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய காவலர்கள் – விரட்டி பிடித்த காவல்துறை …!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு கொடுக்க உத்தரவு – நீதிமன்றம் அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  இந்த வழக்கில் மிகவும் துணிவோடு சாட்சியமளித்த அந்த பெண் காவலர் ரேவதி தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அந்த பெண் காவலர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காவலர் ரேவதிக்கு  ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

தந்தை மகன் கொலைக்கு காரணம் என்ன ? சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை தீவிரம் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ்  வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள்,  இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அப்ரூவர் ஆகிறார் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ? அடுத்தடுத்து திருப்பம் …!!

தந்தை – மகன் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல் ஆய்வாளர், 2 துணை ஆய்வாளர், 2 தலைமை காவலர் என 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு …!!

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  நேற்று மாலை முதலே சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளராக இந்து ரகு கணேஷிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளரான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாள்… 12 குழுக்கள்… விடிய விடிய விசாரணை…. மொத்த போலீசும் கைது…. அதிரடி காட்டிய சிபிசிஐடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பூதாகரமாக மாறியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை நடுவர் பாரதிதாசனை விசாரணை அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. பாரதிதாசன் அளித்த விசாரணை அறிக்கையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது – தொடரும் சிபிசிஐடி நடவடிக்கை …!!

தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சாத்தான்குளத்தில் கடைகள், வணிகர்கள், பென்னிக்ஸ் நண்பர்கள் என எல்லோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்ஷிடம் 5 மணி நேரம் தொடர் விசாரணை  நடைபெற்ற பின்பு அவர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை….!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தன்குளத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறை கிடுபிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் எடுத்துக்கொண்டதில் இருந்து விசாரணையில் அதிவேக நடவடிக்கையாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு : ”எஸ்.ஐ ரகு கணேஷுக்கு 15 நாள் சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகு கணேஷ் 15 நாள் சிறையிலடைக்கப்பட்டார். சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக 4 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சிபிசிஐடியிடம் ஆஜராகினார். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்தனர். இதன்படி தூத்துக்குடி நீதிமன்றத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அறிக்கை விட்ட ரஜினி…. கோர்த்து விட்ட உதய்…. ஷாக் ஆன அதிமுக …!!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்துள்ள ட்விட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் சித்தரவதை மரணம் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் சம்மந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகனேஷ் சிபிசிஐடி போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டுகின்றது. அதே போல மற்றொரு எஸ்.ஐயை சிபிசிஐடி போலீசார் தேடி சென்ற போது தலைமறைவாகி விட்டதாகவும், அவரின் செல் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சாத்தான்குளம் மரணம் – காவலர் முத்துராஜ் கைது…. !!

சாத்தான்குளம் சித்ரவதை மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் முருகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சித்ரவதை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் உதவி ஆய்வாளர் நேற்று நள்ளிரவு உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் முருகன் கைது…. காவலர் முத்துராஜ் தலைமறைவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர்  அவர்கள் இரண்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மேலும் 2 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். கொலை வழக்கு பதிவான நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை காவலர் முத்துராஜ் வலைவீசி சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நடவடிக்கை – மற்றொரு எஸ்.ஐ, தலைக் காவலர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில்  தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ, தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு முதல் நடத்திய சோதனையில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்ல ரஜினி…. இப்போ விஜய்…. மாறிமாறி விளாசல்… நல்லது நடந்தா சரி …!!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்ட்டார். இதனையடுத்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் சாத்தான்குளம் சாத்தான்களை தண்டிக்க வேண்டும் என்று கண்டன வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும் போது, கொரோனா ஒரு கொடிய வைரஸ்னு சொல்றாங்க. பயங்கரமான வைரஸ்னு சொல்றாங்க. ஆனா அதுல மாட்டிக்கிட்டு கூட […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 எஸ்.ஐ, 2 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு – சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தகவல் …!!

சாத்தான்குளம் சம்பவம் எஸ்.ஐ ரகு கணேஷை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட முக்கிய காவல் துணை ஆய்வாளராக பார்க்கப்படும் எஸ்.ஐ ரகு கணேஷை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவில்பட்டிக்கு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் எஸ்.ஐ ரகுகணேஷுக்கு மருத்துவ பரிசோதனை….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார். […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

எஸ்.ஐ ரகு கணேஷை கோர்ட்டில் ஆஜர் படுத்த முடிவு… இரவோடு இரவாக சிபிசிஐடி அதிரடி….

சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய துணை ஆய்வாளர் எஸ்.ஐ ரகு கணேஷை கோர்ட்டில் ஆஜர் படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார். சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு ? செல்போன் ஸ்விச் ஆப் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் விசாரணைக்கு ஆஜராகிய போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணனை தேடி சிபிசிஐடி போலீசார் அவரின் சொந்த ஊர் சென்ற போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வேண்டும் – பென்னிக்ஸ் சகோதரி பெர்சி

இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று பென்னிக்ஸ் சகோதரி பெர்சி தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார்  ரகு கணேஷ் என்ற காவல் துணை ஆய்வாளரை கைது செய்து இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென்னிக்ஸ் சகோதரி பெர்சி உயர்நீதிமன்றத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நீதிமன்றம் நீதியை நிலை நாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வரை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் மரணம் – எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது …!!

சாத்தான்குளத்தில் சந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை தான்  ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் பெற்றுக் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தபடியே வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது.  இன்று காலை முதல் 12 குழுக்களாக சிபிசிஐடி போலீஸ் பிரிந்து இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து இடங்களிலும் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜ் கடை, ஜெயராஜ் வீடு, அவரது உறவினர்கள், கோவில்பட்டி கிளை சிறை, கோவில்பட்டி அரசு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சு ? அம்மா உண்மையை சொல்லுங்க… நான் சோறு போடுறேன் பயப்படாத …. பெண் காவலரின் கணவர் பேட்டி …!!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை பார்த்த பெண் காவலர் கணவர் கொடுத்த பேட்டி தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம் சாத்தான்குளத்தில் அரங்கேறியது. அங்கு செல்போன் நடத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைத்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தை விசாரிக்க நீதித்துறை நடுவர் பாரதிதாசனை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்கள் தண்டிக்கப்படவேண்டும் – நடிகர் விஜய் தந்தை கருத்து

சாத்தான்குளம் சாமானத்தை கண்டித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தனது கண்டனத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸிடம் மாட்டிக்கிட்ட பலர் கூட உயிரோடு திரும்பி வந்திருக்காங்க.  ஆனால் சாத்தான்குளம் சம்பவம் நினைத்து பார்க்கும்போது ஈர கொல […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

சாத்தான்குளம் மரணம் : ”அரசு மருத்துவர் ஆஜர்” மாஜிஸ்திரேட் விசாரணை …!!

15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் ( தந்தை ), பென்னிக்ஸ் ( மகன் ) இருவரும் காவல் நிலைய சித்திரவதையில் மரணமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக ஒருபக்கம் சிபிசிஐடி போலீசாரும், மறுபக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரித்து வருகின்றார்கள். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெனிலா ஆஜராகியுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் மரணம்: சிபிசிஐடி ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி ஆய்வு ..!!

சாத்தான்குளம் மரணம் தொடர்ப்பாக சிபிசிஐடி ஐ,ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விஜயகுமார்  ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தன்குளத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் தந்தை-மகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜ் வீடு ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி  ஐ.ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: போலீஸ் மீது வழக்கு பதிவு எப்போது?- சிபிசிஐடி ஐ.ஜி பதில் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா கூட இணைச்சுடீங்க…. எழுப்புவோம் வாங்க…. ரஜினிக்கு நன்றி சொன்ன உதய் …!!

நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம் – ஜெயராஜ் வீட்டில் சிபிசிஐடி விசாரணை …!!

ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி MP கொடுத்த புகார்….. சூடுபிடிக்கும் விசாரணை… டிஜிபிக்கு நோட்டீஸ் ….!!

தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் மரண விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்திய அளவில் இதற்கான கண்டனக்குரல் எழுந்து வருகின்றன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இதனை சிபிஐ விசாரணைக்கு கொடுக்க  தமிழக அரசும் முடிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் அடுத்தடுத்து […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம் : தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ….!!

தந்தை மகன் மரணம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயர்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.தந்தை-மகன் சித்திரவதை மரணம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சாத்தன்குளத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி விசாரணை …!!

சாத்தன்குளத்தில் சாத்தன்குளத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணமடைந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணையை தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றத்தில் கிளை, இந்த வழக்கை தற்காலிகமாக சிபிசிஐடி மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் மூன்று குழுக்கள் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்தான்….. பொங்கி எழுந்த சூப்பர் ஸ்டார் …!!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரும் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#சத்தியமா_விடவே_கூடாது – நடிகர் ரஜினி ஆவேசம் …!!

தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a — Rajinikanth (@rajinikanth) July 1, 2020

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளத்தில் தடவியல் நிபுணர்கள் மீண்டும் ஆய்வு

சாத்தன்குளம் காவல்நிலையத்தில் இரண்டாவது நாளாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகனை காவல்துறையினரை தாக்கியதில் மரணம் அடைந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாமாக முன்வந்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு உத்தரவிட்டது. அதேபோல் தடயவியல் நிபுணர்களும் சென்று தடயங்களை சேகரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தடவியல் நிபுணர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். காவல் நிலையத்தில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளத்தில் 10 சிபிசிஐடி குழுவினர் விசாரணை ….!!

சாத்தான்குளம் காவல் நிலையம் ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி சேர்ந்த 10 குழுவினர் விசாரணை நடத்துகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையில் சிபிசிஐடி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். முதலாவதாக சாத்தான்குளம் காவல் நிலையம், அதேபோல அதே நேரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை,  சாத்தான்குளத்தில் அரசு மருத்துவமனை என குற்றம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்படுவார்களா குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ.கள் ?

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு நேற்று சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிபிசிஐடி போலீசார் முதல்கட்டமாக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் ரத்தக்கறை சாட்சி…. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் கொடூரம் …!!

பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த பேரவையில் ரத்தக்கறை இருப்பது தற்போது வழக்கில் ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையில் சித்ரவதை செய்து மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பாரதிதாசன் பல்வேறு விஷயங்களை தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை பார்த்த பெண் காவலர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

சாத்தான்குளம் டி.எஸ்.பியாக ராமநாதன் நியமனம் – டிஜிபி நடவடிக்கை …!!

சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் புதிய டிஎஸ்பி ஆக ராமநாதனை நியமனம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கேள்விகளால் துளைத்த சீமான் …!!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை..!!

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 2ம் கட்டமாக நேரில் விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினார். தற்போது, அதன் விசாரணை முடிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் விசாரணையை தொடங்கியுள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோவில்பட்டி மாவட்ட மாஜிஸ்திரேட் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். அது குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரலாற்றில் இப்பதான் இப்படி நடக்குது…. முதல்வராக தகுதி இழந்த பழனிச்சாமி…. ஸ்டாலின் காட்டமான அறிக்கை …!!

சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக  நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு சென்ற நீதிபதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதல் டிஎஸ்பி மிரட்டும் பார்வையுடன், உடல் அசைவுடன் நின்றார். காவல் நிலைய பொது நாட்குறிப்பில் மற்றும் இதர பதிவேடுகளை சமர்ப்பிக்கவில்லை. சிசிடிவி பதிவுகள் தினம்தோறும் அழிந்து போகும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவ தினத்தின் காணொளி  பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. காவலர்கள் கிண்டல் செய்ததால் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் சித்திரவதை மரணம் – டிஎஸ்பி பரத் ஆஜர்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் டிஎஸ்பி பரத் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து 16 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து நேற்று தந்தை மகன் இறந்த குடும்பத்தினரிடம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை மகன் சித்திரவதை மரணம் – சிபிசிஐடி விசாரணை தொடக்கம்….!!

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருப்பதாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் சம்பந்தமான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு தற்போது தான் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை சரக டிஐஜி நீதிமன்றத்தில் இது தொடர்பாக பெற்ற ஆவணங்கள் அனைத்தையும் தற்போது சிபிசிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: பெண் காவலரிடம் நீதித்துறை நடுவர் மீண்டும் விசாரணை …!!

சாத்தான்குளம் தந்தை, மரணம் தொடர்பாக பெண்காவலரிடம் மீண்டும் நீதித்துறை நடுவர் விசாரணை செய்து வருகின்றார். சாத்தன்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் சித்தரவதையால் மரணம் அடைந்த வழக்கை உய்ரநீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த இருவரும் மரணம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று […]

Categories

Tech |