Categories
மாநில செய்திகள்

பிஞ்சு உள்ளத்தில் சா ‘தீ’ யை விதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது….. தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும்…. முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“சாதி, மதம் கிடையாது”…. தனது மகளுக்கு ‘NO CASTE’ சான்றிதழ் வாங்கிய தம்பதி…..!!!!

இந்தியாவில் சாதி சான்றிதழ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கல்வி உதவி தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு என பலவற்றுக்கும் சாதி சான்றிதழ் தேவை. குழந்தை பிறந்தவுடனே பெற்றோர்கள் ஜாதி சான்றிதழ்களை வாங்கி வைத்து விடுவார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்களின் மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது அனைவரது மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“முதன்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ்”…. வழங்கிய வருவாய்த்துறை…!!!

கோவை மாவட்டத்தில் முதல்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் வருவாய்த்துறை  மூலம் வழங்கப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் என்பது குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவரின் மதம் குறிப்பிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் சங்கனூர் கே.கே புதூரில் வசித்த நரேஷ் கார்த்திக். இவருடைய மகள் வில்மா (3 1/2). வில்மாவிற்கு மதம், சாதி சாராதவர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கேட்ட தகவல்… தமிழக அரசு அளித்த விளக்கம்…!!!!

ஜாதி குறித்த தகவல்கள் எதையும் பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளியில் சாதி குறித்த கேள்வி கேட்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சர்ச்சையில் மீரா மிதுன்…. ஜாதியை மட்டமாக பேசியதால்…. குவியும் வழக்குகள்….!!!

ஜாதியை மட்டமாக பேசிய மீராமிதுன் மீது புதிதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மிஸ் இந்தியா உட்பட சில அழகிப் போட்டிகளில் வென்றுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரியவராக வலம் வரும் இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி சில இயக்குனர்களை கைகாட்டி இவர்களின் படங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் சினி துறையிலிருந்து இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து பரவுவதில்லை: இது மிகவும் பொறுப்பற்ற செய்தி… இணை செயலாளர்!

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து வருவதில்லை என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” COVID-19 பரவலை சமூக வாரியாக மேப்பிங் செய்வதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறித்து வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மதம் அடிப்படையில் கொரோனா வருவதில்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
பல்சுவை

“அண்ணல் அம்பேத்கர்” தலித் தலைவரா….? இந்துத்துவவாதியா….?

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தலித் தலைவர் என்றும் இந்துத்துவவாதி என்றும் கூறி வருபவர்களுக்கு பதில் கூறும் தொகுப்பு இந்து மதத்தால் ஒருபோதும் சாதி அழியப் போவதில்லை இந்து மதத்தால் சமூகநீதி சாத்தியப்பட போவதில்லை இந்து மதத்தால் பெண்ணுரிமை சாத்தியப்பட போவதில்லை என எல்லாத் தளங்களிலும் இந்து மதத்தின் உண்மை முகத்தை தோலுரித்தவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர். இந்துக்கள் என்ற மாயையில் இருப்பவர்களை மாற்று தளம் நோக்கி நகரவும் வலியுறுத்தியவர் எனக்கு மேலே ஒருவரும் இல்லை எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ரசிகர்களின் எண்ணமே திரௌபதி படம் – நடிகர் ரிச்சர்ட்

திரௌபதி படம் ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என கதாநாயகன் ரிச்சர்ட் கூறியிருக்கிறார் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட்டிடம் திரௌபதி ஜாதி படம் என மக்கள் கூறி வருகின்றனர் என கேள்வி கேட்டதற்கு, வெவ்வேறு கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் அதற்கு தகுந்தாற் போல் தான் யோசிப்பார்கள் எனவும், திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும்  இத்திரைப்படத்தின் கதையானது மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட்.

Categories

Tech |