தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக செயல்பாடு குறித்த கூட்டத்தில் பேசிய, அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாட்டில் சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து பேருந்துகளை இயக்க வேண்டும். மகளிருக்கான கட்டணமில்லா அனைத்துப் பேருந்துகளையும் ஒரே வண்ணத்தின் கீழ் கொண்டு வர அறிவுறுத்தியுள்ளார்.
