இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா தன் 15 மாத குழந்தையை விட்டு பிரிந்து வந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா டெஹாரியா ஐரோப்பாவின் மிக உயரமான மலைசிகரமான எல்ப்ரஸ் மலையில், இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிந்த்வாரா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள தமியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான் டெஹாரியா. இவருடைய வயது 30 ஆகும். இந்த பெண்மணி, ஆகஸ்ட் 15ம் தேதி […]
