சாகுபடிக்காக சேமித்து வைத்திருக்கும் விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று விதை பரிசோதனை அலுவலர் கூறியுள்ளார். தர்மபுரி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பயிர்களைப் பராமரிப்பதற்கு நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் விதை செலவு குறையும். புறத்தூய்மை பரிசோதனை செய்யும்போது மற்ற பயிர் விதை மற்றும் களைச்செடி கலப்புகள் இருக்கின்றதா? என்று கண்டுபிடிக்கபடுவதால் விதைகளின் தூய்மை உறுதி செய்ய முடிகிறது. […]
