தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரது மகன் சஷ்டி குமார் மருத்துவ படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 15-ஆம் தேதி அருவி ஒன்றில் குளிக்கச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமாரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முதல்வர் […]
