சென்னை திருவான்மியூரில் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் அமைக்கப்பட்டது. இதனை உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா போன்ற வைரஸ்கள் கடைசி வரை நம்முடன் பயணிக்கும். கொரோனா மூன்றாவது அலையை கடக்க காற்றோட்டம் இல்லாத இடம் மற்றும் கூட்டம் கூடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒமைக்ரான் போன்ற வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புரிதல் ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]
