எலிசபெத் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லண்டன் சென்றடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தனது 96 வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதாக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து […]
