பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி, NCS ஆகிய சேமிப்புத் திட்டங்களின் வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. GSec என்று சொல்லப்படும் கடன் பத்திரங்களின் மீது அதிக வருவாய் வருவதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இந்த வட்டி உயர்வை செப்.30 அன்று அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது 7.1% ஆக இருக்கும் பிஎஃப் வட்டி, 7.56% ஆக உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மாத சம்பளதாரர்கள் அதிக பயன்பெறுவார்கள்.
