சர்தார் மருத்துவமனையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். டெல்லியில் உள்ள உலக புகழ்வாய்ந்த மிகப்பெரிய கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையான சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்திலிருந்து நேற்று ஏராளமான கொரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த 161 பேரில் 39 பெண்களும் அடங்குவர். குணமடைந்தவர்களுக்கு இந்தோ-திபெத்தியன் எல்லை கூடுதல் காவல் இயக்குநர் அமிர்த் மோகன் குணமடைந்ததற்கான சான்றிதழ்களையும், ரோஜா பூவையும் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார். உலகின் மிகப்பெரிய கோவிட் […]
