மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் மீதான விசாரணை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்களை விசாரிக்க கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சதீசன், சந்தோஷ் தீபன் ஆகியோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக எடப்பாடிபழனிசாமி தொடர்ந்து […]
