இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்தை திடீரென தலீபான் தீவிரவாதிகள் நிறுத்தி வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சரக்கு போக்குவரத்தை திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குனர் அஜய் சஹாய் கூறியதாவது “நீண்ட காலமாக எங்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாகிஸ்தான் வழியாக நடைபெற்றுக் […]
