நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அருகே ஆறாம் வகுப்பு மாணவன் சரக்கு ஆட்டோ மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரதாபராமபுரம் அருகே முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சிவசந்தோஷ் என்ற மகன் இருந்தார். சிவசந்தோஷ் ஆறாம் வகுப்பை வேளாங்கண்ணி பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவசந்தோஷும், கோகிலாவும் பிரதாபராமபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோ […]
