தமிழகத்தில் அரசாணை நகல் கிடைக்காததால் அரசு தொடக்க பள்ளிகளில் இட மாறுதல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 300 ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் கடந்த ஆறு மாதங்களாக நடந்தது. அதன் பிறகு மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் அனைவரும் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அப்படி தொடக்கக் கல்விப் பிரிவில் இடமாற்றம் செய்யப்பட்ட 300 ஆசிரியர்களுக்கு இன்று வரை […]
