கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மணமக்கள் இருவரும் அண்டாவில் ஏறி மிதந்து வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடியாத காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
