தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
