சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை தொடர்பாக மாநகராட்சி அதிகாரி வெளியிட்ட செய்தியில்,சென்னையில் உள்ள 400 அம்மா உணவகங்களில் வழக்கம் போல உணவுகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டதால் சப்பாத்தி தயாரிப்பது தற்காலிகமாக தடைப்பட்டது. அதன் பிறகு பிரச்சனை சரி செய்யப்பட்டு மீண்டும் சப்பாத்திகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து […]
