கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சன் டிவி நிறுவனம் 30 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும், அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடித்த நன்கொடைகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர். […]
