நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அனுமதியின்றி கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். வேதாரண்யம் அருகே காவல்துறை சிறப்பு பிரிவுக்கு வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கைப்பற்றிய டிராக்டரை கரியாப்பட்டினம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டிராக்டர் உரிமையாளர் சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை காவலர்கள் மீது வீசியதில் தனிப்பிரிவு காவலர்கள் இருவர் காயம் […]
