20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த அளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் சென்னை, கோயம்புத்தூரில் உள்ளிட்ட பெரு நகரங்களில் கட்டடங்களின் எண்ணிக்கையும் அவற்றின் உயரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
