ஐரோப்பிய நாடான அண்டோரா நாட்டில் சர்வதேச சதுரங்க ஓபன் போட்டி கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஈரோட்டை சேர்ந்த பிரபல சதுரங்க வீரரும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ருமான இனியன் பங்கேற்று விளையாடி உள்ளார். இந்த போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் ஒன்பது பேர், சர்வதேச மாஸ்டர்கள் 24 பேர் உட்பட 146 சர்வதேச போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி உள்ளனர். […]
