அணு ஆயுத மூலக்கூறுகளும், அது தொடர்புடைய தொழில்நுட்பமும் சட்டத்திற்கு புறம்பாக பகிர்ந்து கொள்ளப்படுவது தொடர்பில், கவனம் செலுத்துமாறு சர்வதேச சமூகத்தை இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தியிருக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று, ‘விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தம்’ குறித்த விவாதம் நடந்துள்ளது. இதில் வெளியுறவுத்துறை செயலரான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், இந்திய அரசு உலக அளவில் அணு பாதுகாப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. அணு ஆயுதங்களுடைய வலையமைப்புகள், தொழில்நுட்பம், அதன் மூலக்கூறுகள் […]
