சட்டவிரோதமாக புலித்தோல் மறைத்து வைத்ததாக ஆசிரம ஊழியரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் ஒரு ஆசிரமம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக புலித்தோல் மறைத்து வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்ததகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஆசிரமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது அங்கு புலித்தோல்கள், மயில் தோகைகள் சிக்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆசிரமத்தின் பொறுப்பாளரான பாலசுப்ரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் […]
