திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,43,375 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எம். […]
