சாலையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் அரசு வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு அருகே சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த பாலாஜி, லோகேஸ்வரன், மணி என்ற 3 பேர் அந்த மணிபர்சை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் 8 பவுன் தங்க நகை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் […]
