தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்திற்கு சென்ற விமானத்தின் சக்கரத்தில் ஒரு நபர் சுமார் 11 மணி நேரங்களாக மறைந்திருந்து பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நிறுவனத்திற்குரிய சரக்கு விமானமானது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது ஒரு நபர், விமான சக்கரம் இருந்த இடத்தில் மறைந்திருந்து பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. அதாவது சுமார் பதினோரு மணி நேரங்களாக அந்த நபர் விமான சக்கரம் இருக்கக்கூடிய இடத்தில் […]
