விவசாய துறையிலுள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள் என்று குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்வாதிஸ்ரீ கூறினார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு சென்ற ஜனவரியிலும், வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெற்றது. இதையடுத்து இறுதித்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அவற்றில் 685 பேர் தேர்ச்சியடைந்தனர். இதில் கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசியஅளவில் 42வது இடத்தை பிடித்திருக்கிறார். கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் […]
